Header Ads

startMiner - free and simple next generation Bitcoin mining software

களத்தடுப்பில் கோட்டை விட்டதால் இலங்கையின் கிண்ணக் கனவு கலைந்தது.

பாகிஸ்தான் அணிக்கிடையிலான முக்கியமான வாழ்வா, சாவா போட்டியில் இலங்கை அணி பிடியெடுப்புக்கள் மற்றும் களத்தடுப்பில் சொதப்பியதால், சம்பியன்ஸ் கிண்ணக்கனவு கலைந்ததுடன் இலங்கை அணி ரசிகர்களை ஏமற்றிய நிலையில் நாடு திரும்பவுள்ளது.
 http://shihabmalar.blogspot.com/

இலங்கை - பாகிஸ்தான் அணி­க­ளுக்கு இடையே நடை­பெற்ற சம்­பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் போட்­டியில் பாகிஸ்தான் அணி 3 விக்­கெட்­டுக்­களால் வெற்றி பெற்று அரை­யி­று­திக்கு தகுதி பெற்­றுள்­ளது. 
இலங்கை அணியின் மோச­மான களத்­த­டுப்பு, குறிப்­பாக முக்­கி­ய­மான கட்­டத்தில் இரண்டு பிடி­யெ­டுப்­பு­களை தவ­ற­விட்­டதன் மூலமும், பந்­து­வீச்சு மற்றும் அணு­கு­மு­றையின் கார­ண­மாக இலங்கை தோல்­வி­யுற்று தொட­ரி­லி­ருந்து பரி­தா­ப­க­ர­மாக வெளி­யேற்­றப்­பட்­டது.
பாகிஸ்தான் அணியின் சிறப்­பான துடுப்­பாட்­டத்­தினால் இலங்கை அணி வெற்­றி­பெற் ­றது என்று சொல்­வ­தை­விட, இலங்கை வீரர்­களின் தவ­றால்தான் பாகிஸ்தான் வெற்றியை ருசித்தது எனலாம்.
236 ஓட்­டங்கள் என்ற இலக்கை விரட்­டிய பாகிஸ்தான் அணி முதல் ஓவ­ரி­லேயே ஒரு விக்­கெட்டை இழந்­தி­ருக்கும். லசித் மலிங்­கவின் முத­லா­வது ஓவரில் கைக்கே வந்து விழுந்த பந்தை தவ­ற­விட்டார் குண­தி­லக்க. இதன் பிறகு ஒரு ஓவர் நிதா­னித்து அதி­ர­டி­யாக ஆடத்­தொ­டங்­கினர் பாக். வீரர் கள். 11 ஓவர்­க­ளுக்கு விக்கெட் இழப்­பின்றி 74 ஓட்டங்­க ளைக் குவித்­தது பாகிஸ்தான். 
அரைச் சதம் எட்­டிய அக­மது  12 ஆவது ஓவரில் ஆட்­ட­மி­ழந்தார். தொடர்ந்து ஆட வந்த பாபர் அசாம் நீண்ட நேரம் நிலைக்­க­வில்லை. 10 ஓட்­டங்­களை மட்­டுமே எடுத்த நிலையில் அவர் பெவி­லியன் திரும்பஇ தொடர்ந்து வந்த முக­மது ஹபீஸ் அடுத்த ஓவரில் ஒரு ஓட்­டத்­துடன் வீழ்ந்தார். நன்­றாக ஆடி வந்த அசார் அலியும் 20 ஆவது ஓவரில் ஆட்­ட­மி­ழக்க 111 ஓட்­டங்­க­ளுக்கு 4 விக்­கெட்­டு­களை இழந்து பாகிஸ்தான் சற்று தடு­மாற்றம் கண்­டது.
தேவைப்­பட்ட ஓட்­டங்கள்  குறை­வா­கவே இருந்­ததால் பாகிஸ்தான் விக்கெட் இழப்­புக்­களை பற்றி பெரி­தாகக் கவ­லை­யுற்­ற­தாகத் தெரி­ய­வில்லை. அவர்கள் உடல் மொழியில் தன்­னம்­பிக்­கையே தெரிந்­தது.
ஆனால் 25ஆவது ஓவரில் ஷோயிப் மலிக்இ 26ஆவது ஓவரில் இமாத் வாஸிம்இ 30ஆவது ஓவரில் அஷ்ரப் என துரித கதியில் வீரர்கள் வெளி­யேற பாகிஸ்­தானின் ஆட்டம்இ சற்று ஆட்டம் கண்­டது. 30 ஓவர்­களின் முடிவில் 7 விக்­கெட்­டுக்­களை இழந்து 162 ஓட்­டங்கள் எடுத்­தி­ருந்­தது. வெற்­றிக்கு தேவை 20 ஓவர்­களில் 75 ஓட்­டங்கள். தொடர்ந்து களத்தில் இணைந்த சர்­பராஸ் அஹ­மது மற்றும் ஆமிர் இருவர் மட்­டுமே பாகிஸ்தான் அணிக்கு ஒரே நம்­பிக்­கை­யாக இருந்­தனர். அடுத்த 10 ஓவர்கள் இவர்கள் பொறுப்­பாக ஆடஇ மேற்­கொண்டு விக்கெட் இழக்­காமல் பாக். இலக்கை நெருங்­கி­யது.
இதற்கு நடுவில்இ 39ஆவது ஓவரில், மலிங்க வீசிய பந்தை சர்­பராஸ் நேராக தூக்க, கைக்கு வந்த பிடியை தவ­ற­விட்டார் திசர. அடுத்த ஓவரில் மீண்டும் சர்­ப­ராஸின் பிடியை தவ­ற­விட்டார் சீகுகே பிர­சன்ன. அதன்­பி­றகு அற்­பு­த­மாக ஆடி வந்த சர்­பராஸ் 71 பந்­து­களில் அரைச் சதம் கடந்தார். அவ­ரது அரைச் சதத்தை விட, அணிக்கு மிக முக்­கி­ய­மான 50 ஓட்­ட­ங்களை, முக்­கி­ய­மான கட்­டத்தில் குவித்தார் என்­பதே அந்த சூழலில் சிறப்­பம்­ச­மாக இருந்­தது.
சர்­பராஸ் தொடர்ந்து தோள் கொடுக்க, மறு­மு­னையில் முக­மது ஆமிரும் அவ­ருக்கு உறு­து­ணை­யாக இருந்தார். இறு­தியில் 44 ஆவது ஓவரின் 5ஆவது பந்தில், சர்­பராஸ் அடித்த பவுண்­ட­ரி­யுடன் பாகிஸ்தான் அணி வெற்றி இலக்கை எட்டி 3 விக்­கெட்­டுக்கள் வித்­தி­யா­சத்தில் வெற்றி கண்­டது. முக்­கி­ய­மாக அரை­யி­று­திக்கும் தகு­தியும் பெற்­றது.
இலங்கை அணியின் மோச­மான களத்­த­டுப்பின் மூலம் அரு­மை­யான வாய்ப்பை கோட்­டை­விட்­டுள்­ளது. இந்த போட்­டியில் தோல்­வி­யுற்­றதன் மூலம் சம்­பியன்ஸ் கிண்ணத் தொட­ரி­லி­ருந்து இலங்கை அணி வெளி­யேற்­றப்­பட்­டது.
இந்த வெற்­றியின் மூலம் அரையிறுதிக்கு தகுதிபெற்றது பாகிஸ்தான். அதன்படி சம்பியன்ஸ் கிண்ண அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்துஇ இந்தியாஇ பங்களாதேஷூடன் பாகிஸ்தானும் இணைந்துகொண்டது. இதன்படி அரையிறுதிக்கு மூன்று ஆசிய அணிகள் நுழைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

MAM.Thanis Shihab. Blogger இயக்குவது.